ஜன.26, 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஆக்கூர் மற்றும் மடப்புரம் ஊராட்சிகளில் நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில்.. தேசத்தின் ஒருமைப்பாட்டை குலைக்கும் CAA சட்டத்தை கைவிட வேண்டும். மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்கும் NRC மற்றும் NPR பதிவுகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், 5 மற்றும் 8 வகுப்பிற்கான பொதுத் தேர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்களின் கருத்தை கேட்காமலே நடைமுறை படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, ஆக்கூர் பேருந்து நிலையம் அருகில் CPI(M) தரங்கபாடி வட்டக் குழு சார்பில் இந்திய மக்களை பிளவுப்படுத்தும் CAA சட்டத்தை வாபஸ் பெற கோரி குடியரசு தினத்தை முன்னிட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விலும், ஆக்கூர் மு.ஷாஜஹான் தலைமையில் மஜகவினர் திரளாகப் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம்.
Tag: கிராமசபைக்கூட்டம்
புலிவலத்தில் கொடியேற்று விழா! CAAவுக்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் மனு!
ஜன.26, திருவாரூர் மாவட்டம், #புலிவலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திர கொடியினை மஜக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா ஏற்றி வைத்து 'சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி' ஏற்கப்பட்டது. இதில் புலிவலம் கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். மஜக எடையூர் #சங்கேந்தி கிளை சார்பிலும், #எரவாஞ்சேரி கிளை சார்பிலும் அந்தந்த ஊராட்சிகளில் நடைப்பெற்ற 'கிராமசபா' கூட்டத்தில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தமது கிராம ஊராட்சியில் நடைபெறும் இச்சிறப்பு குடியரசு தின கிராம சபா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை நிறைவேற்றுமாறும், உள்ளூர் பிரச்சனைகளை சீர் செய்ய கோரியும் மஜக சார்பில் மனு அளித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.