புலிவலத்தில் கொடியேற்று விழா! CAAவுக்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் மனு!

ஜன.26,

திருவாரூர் மாவட்டம், #புலிவலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய சுதந்திர கொடியினை மஜக மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா ஏற்றி வைத்து ‘சட்டப் பாதுகாப்பு உறுதி மொழி’ ஏற்கப்பட்டது. இதில் புலிவலம் கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

மஜக எடையூர் #சங்கேந்தி கிளை சார்பிலும், #எரவாஞ்சேரி கிளை சார்பிலும் அந்தந்த ஊராட்சிகளில் நடைப்பெற்ற ‘கிராமசபா’ கூட்டத்தில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தமது கிராம ஊராட்சியில் நடைபெறும் இச்சிறப்பு குடியரசு தின கிராம சபா கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக தீர்மானத்தை நிறைவேற்றுமாறும், உள்ளூர் பிரச்சனைகளை சீர் செய்ய கோரியும் மஜக சார்பில் மனு அளித்தனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.