பாயிண்ட் காலிமர் பன்னாட்டு பள்ளி நிகழ்ச்சியில் மஜக பொதுச்செயலாளர்.

image

நாகை மாவட்டம் தோப்புத்துறை அருகில் உள்ள குரவப்புலத்தில் இயங்கி வரும் #Point_Calimere பன்னாட்டு CBSE பள்ளியில் நேற்று (06.08.2016) sports day நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் இத்தாலி, ஈரான், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர்.

இதில் மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA, முன்னாள் அமைச்சர் R.ஜீவானந்தம்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவ,மாணவியரின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டியில் வென்றவர்களுக்கு பள்ளியின் தாளாளரும், சமூக ஆர்வலருமான M.#சுல்தானுல்_ஆரிபின் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட CBSE பள்ளிக்கூடங்களில் இதுதான் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்; மஜக_ஊடகப்பிரிவு,
நாகை தெற்கு.