செங்கத்திலும் தொடர்ந்த டிசம்பர் எழுச்சி…! ஆர்வமுடன் மஜகவில் இணைந்த மக்கள்…!!

image

image

image

image

திருவண்ணாமலை.டிச.17., திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் ஜமாத்தினர்களும் மற்றும் பிற கட்சிகளிலிருந்து விலகியும்  50க்கும் மேற்பட்டோர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக இறையூரில் இரண்டு இடங்களில் பொதுச்செயலாளர் அவர்கள் கட்சியின் கொடிகளை ஏற்றி வைத்தார்.

அதணைத் தொடர்ந்து செங்கத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் அவர்கள் மஜகவின் நகர அலுவலகத்தை திறந்து வைத்தார். இங்கும்  பொதுச்செயலாளர் முன்னிலையில் 25பேர்கள் மஜகவில் தங்களை இணைத்துகொண்டனர்.

நகர அலுவலக வாயிலில் மாநில துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.

பிறகு சமீபத்தில் விபத்தில் மரணமடைந்த செங்கம் ஒன்றிய துணை செயலாளர் இதாயத்துல்லா அவர்களுடைய இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய பொதுச்செயலாளர் அவர்கள் தலைமையின் சார்பில் நிதி உதவியை வழங்கினார்.

இந்நிகழ்வுகளின் போது துணை பொதுச்செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத் மாநில துணை செயலாளர் பல்லவரம் ஷபி மாவட்ட செயலாளர் ஹாஜா ஷெரீப், பொருளாளர் செய்யது முஸ்தபா, ஷபீர் மற்றும் அணைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்