துளசியாப்பட்டிணத்தில் மஜக பொதுச்செயலாளர்

image

நேற்று மாலை நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திற்கு மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் வருகை புரிந்தார்.மஃரிப் தொழுகைக்கு பிறகு அவ்வூர் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அப்போது தங்கள் ஊருக்கு #சாலை_வசதிகள் மேம்பாடு  மற்றும் #ஆரம்ப_சுகாதார_நிலையம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்து தரும்படி அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் அவர்களுடன் பேசுவதாக பொதுச்செயலாளர் கூறி விடைபெற்றார்.

பிறகு ஜமாத் துணைத்தலைவர் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களை வீட்டில் சந்தித்து உரையாடிவிட்டு புறப்பட்டார்.

-மஜக ஊடகப்பிரிவு