முத்துபேட்டையில் மஜக பொதுச்செயலாளர்.

image

நேற்று முத்துப்பேட்டைக்கு *மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA* அவர்கள் வருகை தந்தார்.ஆசாத் நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற அசாருதீன்  திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

முத்துப்பேட்டை மக்களுடன் நெருங்கிய தோழமை வைத்திருக்கும் பொதுச் செயலாளருக்கு பொது மக்களும், ஜமாத்தார்களும், பிரமுகர்களும் கட்டிதழுவி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

தொடர்ந்து ஏராளமானோர் அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்து வாழ்த்துக்கள் கூறினர்.

முத்துப்பேட்டை சமூக ஆர்வலரும், தொழிலதிபருமான *TVS.Dr.ஹைதர் அலி* அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் இல்லத்துக்கு சென்று உரையாடினார்.

அன்று மாலை முத்துப்பேட்டை மஜக நகர ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார். பிறகு ஜாம்புவானோடை சென்று முத்துப்பேட்டை தர்ஹா தலைவரும், தர்ஹாக்கள் ஒருங்கிணைப்பு பேரவையின் நிறுவனருமான S.S.பாக்கர் அலி சாஹிப் அவர்களை சந்தித்தார். நாகை தொகுதியில் தனது வெற்றிக்கு பணியாற்றியதற்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்துகொண்டார்.

-மஜக ஊடகப்பிரிவு