நெல்லையில்… திமுக துணைப் பொதுசெயலாளர் கவிஞர் கனிமொழி சூறாவளி பிரச்சாரம்..! மஜக வினர் திரளாக பங்கேற்பு…

ஏப்ரல்.3.,

திமுக துணைபொதுச் செயலாளரும், தூத்துகுடி நாடாளுமன்ற வேட்பாளருமான கனிமொழி கருணாநிதி அவர்கள்,
நெல்லையில் சூறாவளி பிரச்சாரத்தை
மேற்கொண்டார்.

I.N.D.I.A கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டும், பாஜக-வின் மக்கள் விரோத போக்கை அம்பலபடுத்தியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அலிஃப் A.பிலால் ராஜா தலைமையில், மண்டல இளைஞர் அணி செயலாளர் அஷ்ரப், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் சேக் மற்றும்

நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு பொறுப்பாளர்கள் பேட்டை ராஜா, செய்யது உட்பட்ட நெல்லை டவுன் பேட்டை மானூர் ஒன்றியம் தாழையுத்து பகுதிகளைச் சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#நெல்லை_தொகுதி
#MJK_IT_WING
03.04.2024.