கூத்தாநல்லூர் இஃப்தார் நிகழ்ச்சியில் ம.ஜ.க பொதுசெயலாளர்!!!

image

image

கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசலில்  நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ம.ஜ.க பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கலந்து கொண்டார். பள்ளிவாசலுக்கு வருகை தந்த  அவருக்கு ஜமாத்தார்கள் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு ஜமாத்தார்கள் சார்பில்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதில் கூத்தாநல்லூரை தனி தாலுக்காவாக ஆக்க வேண்டும், மின் சிக்கல்கள்களை தீர்க்க நவீன டிரான்ஸ்பர்மர்கள் அமைத்து தர வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி இருந்தன.

இதுகுறித்து  அமைச்சர்களிடம் பேசி உடனடி தீர்வு காணப்படும்  என்று  உறுதி அளித்தார்.

பொதுசெயலாளர் வருகையை முன்னிட்டு வழக்கத்தை விட நான்கு மடங்கு மக்கள்  இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொழுகைக்கு பிறகு உள்ளுர் சேவை அமைப்புகளை சேர்ந்தவர்களும், சமூக  ஆர்வலர்களும், ஏராளமான  இளைஞர்களும்  தேர்தலில் வெற்றி பெற்றதற்க்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம்  எடுத்து கொண்டனர்.

தகவல் : மஜக ஊடகபிரிவு