குடி தண்ணீர் வேண்டி மஜக அலுவலகம் வந்த பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை..!

image

image

திண்டுக்கல்.ஜூலை.10.,
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியில் நண்ணப்பா நகர் பகுதி
பொது மக்களுக்கு
குடி தண்ணீர் முறையாக விநியோகம் செய்யாமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விநியோகம் செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்கள்.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளர் A. ஹபிபுல்லா தலைமையில் , திண்டுக்கல் நகர பொறுப்பு குழு தலைவர்
B. காதர் ஒலி, பொறுப்பு குழு உறுப்பினர் B.செல் சேக் , நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொது மக்களுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டார்கள்.

சம்பவ இடத்திற்க்கு வந்த மாநகராட்சி ஆணையர் அவர்கள்  தற்போதைக்கு அப்பகுதி மக்களுக்கு  மாநகராட்சி தண்ணீர் லாரியில் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், நண்ணப்பா நகர் பகுதி மக்களின் குறையை சரி செய்யும் விதமாக  மாநகராட்சியின் சார்பாக ஆழ்துளைக் கிணறு (RO) சிஸ்டம் உடன் அமைத்து தறுவதாகவும்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம் வாக்குறுதி அளித்தார்கள்.

அதிகாரிகள் வாக்குறுதி
அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது.
இதற்க்கு அப்பகுதி பொது மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கும்
தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING
மனிதநேய ஜனநாயக கட்சி,
திண்டுக்கல் மாவட்டம்.
10.07.2017