வட சென்னையில் மஜகவில் தொடரும் இணைப்புகள் பெரம்பூர் தொகுதியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…

மே.20.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்த்து திரளான இளைஞர்கள் மஜக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இன்று காலை வடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட திரளான இளைஞர்கள் அல்லா பகஷ் தலைமையில் மஜக-வில் இணைந்தனர்.

மாநில துணைச்செயலாளர் அரிமா.A.M.அஸாருதீன் அவர்களது தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாநில செயலாளர்கள் நாகை.முபாரக், கலைக்குயில் இப்ராஹீம் ஆகியோர் புதியதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினர்.

மேலும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களது அரசியல் செயல்பாடுகள் மற்றும் மஜக-வின் கொள்கைகள் குறித்து புதியதாக இணைந்தவர்களுக்கு மத்தியில் தலைமை நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தினர்.

சமீப காலமாக வட சென்னையில் மஜக-வில் இணைபவர்களின் எண்ணிக்கைகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், MJTS மாநில துணைச்செயலாளர் மாத்தூர். இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் ரஜாக், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_மேற்கு_மாவட்டம்
20.05.2024.