திருவண்ணாமலையில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு…

மே,06.,

தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை நகரம் சார்பில் இன்று lபொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை மஜக மாவட்ட செயலாளர் குமார் அவர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது மேலும் கோடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய மஜக நகர நிர்வாகம் சார்பாக தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்டதுணை செயலாளர்கள் தமிழன் முஸ்தபா, S.K.செய்யது அலி, திமுக 36 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜோதிமணி, நாஸிறுல் முஸ்லிமின் அறக்கட்டளை தலைவர் பாஷா, மாவட்ட பொருளாளர் அமீர்கான், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இலியாஸ், மன்சூர் கான், நகர செயலாளர் அம்ஜத் கான், பொருளாளர் அப்துல் ரஹ்மான் நகர நிர்வாகிகள் தினகரன், தஸ்தகீர், நூர் அப்ரர், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவண்ணாமலை_மாவட்டம்.
06.05.2024.