இளையான்குடியில் உற்சாகம் மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகன் திருமண விழா தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு….

மே – 05.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகனும் மணமகனும்மான M.இஜாஸ் அகமது M.A., அவர்களுக்கும், மனமகள் PA.ஃபாஸியா B.A., அவர்களுக்கும் இடையே இன்று இளையான்குடியில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக், துணைத் தலைவர் மண்ணை செல்லசாமி, மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

இத்திருமண விழாவை முன்னிட்டு நகர மஜக-வின் சார்பில் இளையான்குடி முழுக்க 300-க்கும் அதிகமான இடங்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நகரின் முக்கிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக-வினர் ஆங்காங்கே ஏராளமான வரவேற்பு தட்டிகளும் வைத்திருந்தனர் .

இத் திருமண விழாவிற்கு வருகை தந்த தலைவருக்கு மாவட்ட மஜக-வின் சார்பில் ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பு செய்யப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனால் பிரதான வீதியில் நெரிசல் ஏற்பட்டது. பிறகு காவல் துறை வாகனம் முன் சென்று அது சரி செய்யப்பட்டது.

மேல பள்ளிவாசலில் திருமணம் முடிந்ததும் இளையான்குடியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், ஜமாத் நிர்வாகிகளும், கல்வி ஆர்வலர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் தலைவர் அவர்களை அங்கேயே சந்தித்து கட்சி பணிகள் குறித்தும், இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் உற்சாகமாக உரையாடினர் .

மஜக எடுத்த அரசியல் நிலைப்பாடுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறை என்றும் வெகுவாக பாராட்டினர் .

இளையான்குடியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடன் நீண்ட நேரமாக வரிசையில் நின்று படம் எடுத்துக் கொண்டனர் .

நிறைய இளைஞர்கள், மாணவர்கள் அவருடன் தற்படம் (Selfi) எடுத்துக்கொண்டு உரையாடி மகிழ்ந்தனர்.

இளையான்குடியை சேர்ந்த பலரும் இனி மஜக-வின் சார்பில் அதிகமான நிகழ்ச்சிகளை இங்கு நடத்துங்கள் என்று கூறியதுடன், அப்படி நடத்துகின்ற போது எங்கள் ஊர் மக்களுடைய முழு ஆதரவும் தங்களுக்கு உண்டு என்றும் உற்சாகம் பொங்க தெரிவித்தனர் .

வெளிநாடுகளில் இருந்தும், சென்னையிலிருந்தும் திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த இளையான்குடிவாசிகள் மஜக-வின் அரசியல் நடவடிக்கைகள் தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் கூறி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

பிறகு தலைவர் அவர்களை அவருடன் படித்த புதுக் கல்லூரி நண்பர்களும் சந்தித்து உரையாடினர்.

பொதுச்செயலாளர் அவர்களுடைய திருமண விழாவில் மாநில துணைச் செயலாளர்கள், மாநில அணிகளின் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கான மஜக-வினர் இளையான்குடிக்கு உற்சாகமாக திரண்டு வந்து திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது .

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சிவகங்கை_மாவட்டம்
05.05.2024.