திரையரங்க தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்.!


நெல்லை.ஆக.25.,

கொரோனா நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள திரையரங்க தொழிலாளர்களை கண்டறிந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) நெல்லை மாவட்டம் சார்பாக நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக வழங்கினர்.

இந்நிகழ்விற்கு மஜக மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா தலைமை தாங்கினார், MJTS மாவட்டச் செயலாளர் நாகூர்மீரான், MJTS பேட்டை நகர செயலாளர் ஹபிபுல்லாஹ், MJTS மேலப்பாளைய நகர செயலாளர் A1 மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மேலும் நெல்லை பகுதி செயலாளர் கலீல், பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார், பேட்டை நகர பொருளாளர் அசன்கனி, பேட்டை நகர துணை செயலாளர் ஐ.டி.ஐ.சங்கர், சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

நிவாரண பொருட்கள் பெற்ற திரையரங்க தொழிலாளர்கள் தங்களை யாருமே கண்டுகொள்ளாத சூழலில் மனிதநேய ஜனநாயக கட்சி எங்களுக்கு உதவியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என்று தங்களது நன்றியை தெரிவித்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லைமாவட்டம்
25-08-2020