சேலத்தில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்.!

சேலம்.ஆகஸ்ட்.24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக சேலத்தில் மாவட்டச் செயலாளர் M.A. மஹபூப் அலி, மாவட்ட பொருளாளர் OS. பாபு, ஆகியோர் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சர்புதீன், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தஸ்தகீர், இளைஞரணி மாவட்ட பொருளாளர் யாசர், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த இரு மாதங்களாக தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#சேலம்_மாவட்டம்
23-08-2020