இளையான்குடியில் வணிகர் தின கொண்டாட்டம் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக மோர் பழங்கள் வழங்கல்….

மே-5.,

வணிகர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வணிகர் அமைப்புகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மஜக சார்பு வணிக அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பாக MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கம்மாங்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள், மோர் வழங்கப்பட்டது.

இதில் மஜக மாநில செயலாளர் நாகை.முபாரக் அவர்கள் பங்கேற்று குளிர்பானங்கள், பழங்களை சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

வாகனங்களை நிறுத்தி அதிலிருந்தவர்களுக்கும் பழங்களும், மோரும் வழங்கப்பட்டதால் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது.

இந்நிகழ்வை முன்னிட்டு நகரெங்கும் மஜக கொடிகள் நடப்பட்டு பிரதான வீதிகள் எங்கும் பரபரப்பாக இருந்தது.

இன்று MJVS சார்பில் இளையான்குடியில் இப்பணியை முன்னெடுத்ததற்காக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MJVS நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை கூறினார்.

MJVS -ன் இன்றைய நிகழ்வுக்கு இளையான்குடி மக்கள் பலத்த வரவேற்பை வழங்கியதை பார்க்க முடிந்தது.

அடுத்தடுத்து இது போன்ற நிகழ்ச்சிகளை இங்கு நடத்துங்கள் என்றும் அவர்கள் ஆர்வமுடன் கூறினர்.

ஒரே நாளில் மஜக மாவட்டச் செயலாளர் சல்லை. ஹாஜா தலைமையில் நகர மஜக-வினர் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாநில துணைச்செயலாளர் அரிமா.A.M.அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், MJTS மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர், சிவகங்கை மாவட்ட செயலாளர் காஜா, மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சிவகங்கை_மாவட்டம்
05.05.2024.