தென்சென்னை மஜகவில் தொடரும் இணைவுகள்…

மே.03.,

தென்சென்னை மாவட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் T.முகமது அனிபா அவர்களது தலைமையில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

புதியதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை தலைவர் அவர்கள் வழங்கி வரவேற்றார்.

புதிதாக இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் உடனிருந்தார்.

சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களில் மஜகவில் கூட்டம், கூட்டமாக பலரும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென்சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த K.ஷாஜகான், A.முகமது உமர், ஜியாவுதீன், H.ஜின்னா ஹசன் அலி, N.கலீல் பாஷா, M.நைனார், முஹம்மது, பாலமுருகன், S.பிரவீன் குமார், M.ஹரி கிருஷ்ணன், K.ஏழுமலை ஆகியோர் கட்சியில் இணைந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்சென்னை_மாவட்டம்
02.05.2024.