அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த வேலூர் மஜகவினர்.!

வேலூர்.ஆகஸ்டு.12.,

நாகையை சேர்ந்த பெண்மணி ஒருவர் உடல் நலக்குறைவால் வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்ததின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்ற வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் 3-யூனிட் இரத்த தானம் செய்தனர்.

அச்சமயம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்மணிக்கு அவசர அறுவை சிகிச்சைக்கும் இரத்தம் தேவைபடுவதாக மருத்துமனை சார்பில் கேட்டு கொண்டதற்கு இணங்க மேலும் 1-யூனிட் இரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
12.08.2020