குமரி மாவட்டம் கற்காடு பகுதியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!


ஆகஸ்ட் 12,

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சி கற்காடு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நாகர்கோவில் மாநகர பொருளாளர் ஐய்யப்பன், அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது.

வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் கபசுர குடிநீரை வாங்கி பருகி பயனடைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்டச் துணை செயலாளர் முஜீப் ரஹ்மான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர்கான், மாநகர துணை செயலாளர் அஷ்ரப், சுசீந்திரம் பேரூராட்சி கிளை செயலாளர் வினோத், சுசீந்திரம் பேரூராட்சி கிளை பொருளாளர் ஐய்யப்பன் மற்றும் உறுப்பினர்கள் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
12-08-2020