கொரோனாவால் உயிரிழந்த கிறித்தவர்_உடல்! நல்லடக்கம் செய்த மஜகவினர்!

சென்னை.ஆகஸ்ட்.11.,

கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்றை தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இறந்தவரின் உறவினர்கள் மற்றும் மே-17 இயக்க தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடலை மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவ சேவை அணியினர் பெற்று, பாதுகாப்பு உடையுடன் சென்னை சாந்தோம் கிறித்தவ இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனா்.

இது குறித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் மாநில துணைத் தலைவர் ஸ்டீபன் அவர்கள் நன்றி கூறி பேசினார்.

அப்போது இது ஈடு இணையற்ற சேவை என்றும், சாதி மதம் பாராமல் இக்கட்டான நேரத்தில் மஜக-வினர் ஆற்றும் பணியை மனம் நெகிழ பாராட்டுவதாகவும் கூறினார்.

சென்னையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு, அழைப்பு வரும் இடங்களுக்கு மஜக மருத்துவ சேவை அணியின் மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் மஜக-வினர் சென்று இப்பணிகளை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மருத்துவ_சேவை_அணி
11-08-2020