மே தினம் MJTS கொடியேற்றல் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார் பொதுச்செயலாளர் மெளலா நாசர் உறுதிமொழி வாசிப்பு….

மே-1

இன்று உழைப்பாளர் திருநாளான மே தினத்தை முன்னிட்டு மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கமான MJTS சார்பில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு MJTS மாநில துணைச் செயலாளர் மாததூர் இப்ராகிம் தலைமை வகித்தார்.

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கொடியேற்றினார்.

மஜக பொதுச் செயலாளர் மெளலா.நாசர் அவர்கள் தொழிலாளர் உறுதிமொழியை வாசித்தார்.

இதில் திரளான MJTS நிர்வாகிகள் பங்கேற்று உறுதிமொழியை திரும்ப கூறினர்.

இதில் மஜக மாநில செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர்கள் அஸாருதீன், பேரா. சலாம், S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் காதர், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கமால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
01.05.2024.