தென்சென்னை… பிரச்சார களத்தை பிரம்மாண்டமாகிய மஜகவின் வாகன பேரணி…

ஏப்ரல்.08.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மஜக-வினரையும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட அறிவுறுத்தி வருகிறார்.

அதன்படி தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையில் மஜக-வினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்துக்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரச்சார பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் மஜக-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

மேலும் மஜக மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அஹமது, நாகூரான் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் சத்தியன், பகுதி பொருளாளர் காட்வின் துணைச் செயலாளர் மஹபூப் உட்பட திரளான மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
05.04.2024.