அத்தாட்சி நூல் அறிமுகம்! மு.தமிமுன் அன்சாரி வெளியிட தனியரசு பெற்றுக் கொண்டார்…..

மார்ச்.27,

இன்று மஜக தலைமையகத்திற்கு தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு நல்லெண்ண வருகை தந்தார்.

சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் மஜக தலைமையகத்தில் தினமும் நடைபெறும் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வில் பங்கேற்றார்.

அப்போது ‘அத்தாட்சிகள்’ திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் என்ற நூலின் முதல் பாகத்தை தலைவர் வழங்க, அதை தனியரசு பெற்றுக் கொண்டார்.

சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ள 4 பாகங்களை கொண்ட இந்நூல் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருக்குர்ஆனின் உள்ளடக்கத்தை பல்வேறு தலைப்புகளில் அறிவியல், வரலாறு ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத்தி இந்நூல் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் நூலக உலகில் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

(நூல் பெற : 98409 7758-
www. Sajithabook Centre.com )

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
27.03.2024.