பொள்ளாச்சியில்… பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு விழா!! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு…

மார்ச்.26.,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மஜகவினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ் தலைமையில் மஜக-வினர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு விழாவிலும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி, மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, அன்வர் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நர்சரி ஷாஜஹான், பைரோஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் சம்சுதீன், பொருளாளர் பாசித், நகர துணைச் செயலாளர் அலாவுதீன், அப்பாஸ், ஆனைமலை ஒன்றிய செயலாளர் அலாவுதீன், நகர இளைஞரணி செயலாளர் இஸ்மாயில், இளைஞர் அணி பொருளாளர் ஷாக்கீல், வணிகர் அணி செயலாளர் முகமது ஜியாத், துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில், மாணவர் இந்தியா நகர செயலாளர் முகமது சாஜாத், தொழிற்சங்க துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், கிருஷ்ணன் மற்றும் சக்கீர்,முகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
25.03.24.