நாகை INDIA கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு…

மார்ச்.25.,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள்.

அதன்படி நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வை.செல்வராஜ் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் நாகை லலிதா மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய துணைப்பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்கள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், நாகை மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா, திருவாரூர் மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, நாகை மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல் ஹமீது(எ) கண்ணுவாப்பா,பேபி ஷாப் (எ) பகுருதீன்,பாலமுரளி, மஜக நாகை நகரமன்ற உறுப்பினர் M.ஜென்னத்பேகம் MC, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல் மாலிக்,ஒன்றிய நிர்வாகிகள் மஞ்சை சதாம்,திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் மற்றும் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், அப்துல் கரீம், ரிஸ்வான், மூத்த உறுப்பினர் சர்புதீன், குத்புதீன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#தேர்தல்_பணி_குழு
#நாகை_நாடளுமன்ற_தொகுதி
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJK_IT_WING
25.03.2024.