நாகை நாடாளுமன்ற மஜக ஆலோசனை கூட்டம்!! துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் பங்கேற்பு…

மார்ச்.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு துணை பொதுச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் மற்றும் மாநில துணை செயலாளர் போராவூரணி சலாம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

நாகை பாரளுமன்ற தொகுதியில் INDIA கூட்டனியின் வெற்றி வேட்பாளர் செல்வராஜ் அவர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், நாகை மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன், அவைத் தலைவர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஜெயினுதின், ஷேக் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் அகமதுல்லா, கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது, பேபி ஷாப் (எ) ஃபக்ருதீன், பாலமுரளி மற்றும் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர் நாச்சிகுளம் ஜான் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தேர்தல்_பணி_குழு
#நாகை_நாடாளுமன்ற_தொகுதி
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
22.03.2024.