அரவிந்த் கெஜ்ரிவால் கைது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்…

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதல்ல.

அப்படி அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தால், முதலில் பாஜக தலைவர்களை நோக்கித்தான் படையெடுக்க வேண்டும்.

I.N.D.I.A கூட்டணியின் ஏறுமுகம் பாஜகவை திணறடித்து வருகிறது.

இதனால் பிரதமர் மோடி அரசியல் பதட்டத்தில் இருக்கிறார் என்பதையே இந்த கைது மூலம் உணர முடிகிறது.

மனிதநேய ஜனநாயக கட்சி இந்த கைதை கண்டிக்கிறது.

இதற்கு மக்கள் தேர்தல் வழியாக சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கைது சம்பவம் ஜனநாயக சக்திகள் மேலும் வலிமையுடன் அணி திரளக் கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்
மனித நேய ஜனநாயக கட்சி
22.03.2024.