SDPI இல்ல துயர நிகழ்வு… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்….

மார்ச்.06.,

SDPI கட்சியின் சென்னை வடக்கு மண்டல தலைவர் முஹம்மது ரஷீத் அவர்களது இளைய மகன் உசைர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்தார்.

இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை- ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

9 ஆண்டுகளாக அவரை நோயுடன் பராமரித்த தியாகத்தை நினைவு கூர்ந்து, அவர்களது பிள்ளையின் மறு உலக வாழ்வுக்கு பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

அப்போது மாநில செயலாளர் நாகை. முபாரக், மாநில துணைச் செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அகமது, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவகங்கை அபுதாஹீர் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வட_சென்னை_கிழக்கு_மாவட்டம்
06.03.2024.