சேலத்தை தொடர்ந்து ஒசூரில்… தொடரும் எழுச்சிமிகு இணைவுகள்… மஜகவில் இணைந்த சமூக நீதி பட்டாளம்…..

மார்ச்.06.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியல் மற்றும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையிலான செயல்பாடு, அணுகுமுறைகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னார்வத்துடன் இளைஞர்களும், மாணவர்களும், வணிகர்களும், சமூக நீதி ஆர்வலர்களும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்.28 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற தலைமை பொதுக்குழுவிற்கு பின்னர் கட்சியில் இணைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஜிங்கலூர் ஊராட்சியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கடந்த 3 நாட்களில் சேலம், மற்றும் கிருஷ்ணகிரியை தொடர்ந்து அடுத்தடுத்து இது போன்ற இணைப்புகள் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகமது உமர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ADS. சர்தார், சையத் ஜலால், ஜிங்களூர் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப், மாவட்ட இளைஞரணி செயலாளர் மகபூப் ஷெரீப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அன்சர், ஒன்றிய செயலாளர் பாஷா, ஓசூர் மாநகர துணை செயலாளர் மகபூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்
05.03.2024.