நெல்லையில்…. தூய்மை பணியாளருக்கு மஜக நிதி உதவி….

மார்ச்.06;

நெல்லை மாவட்டம் பனங்குடியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் விபத்தினால் இரு கால்களையும் இழந்த வசந்தி என்ற பெண்ணிற்கு ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை கலைக்கண்ணன் வேண்டுகோளுக்கு இணங்க மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் பாளை A. M.பாரூக் அவர்கள் நிதி உதவி வழங்கினார்.

நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா, மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் மேலப்பாளையம் 50 வார்டு முஹமது இஸ்மாயில், மாவட்ட துணை செயலாளர் முருகேசன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால் சேக், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
05.03.2024.