காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திரளானோர் மஜக உறுப்பினராக இணைந்தனர்….

மார்ச்.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் நகர செயலாளர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

நிகழ்வை மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர் மற்றும் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தனர்.

அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கட்சியின் துண்டறிக்கையை பெற்று மஜக-வின் உறுப்பினராக இணைந்தனர்.

உறுப்பினராக இணைந்த பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அரசியல் பணிகளை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நகர பொருளாளர் அப்துல் அஜீஸ், நகர துணை செயலாளர் சனாவுல்லாஹ், இளைஞர் அணி செயலாளர் அசரஃப் அலி, துணைச்செயலாளர் முகமது ரஃபீக், வணிகர் அணி நகர செயலாளர் அலாவுதீன், மற்றும் நசுருதீன், அபினாஷ், சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#காஞ்சிபுரம்_மாவட்டம்
01.03.2024.