குவைத்தில்… வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு….

பிப்ரவரி.26.,

குவைத்திற்கு மூன்று நாட்கள் வருகை மேற்கொண்டிருக்கும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குவைத் வந்திருக்கும் அவருக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கம் சார்பில் பாராட்டும், வரவேற்பும் அளிக்கப்பட்டது.

அவரை வரவேற்று அதன் தலைவர் நெல்லை மரைக்காயர் அவர்கள் நினைவு பரிசினை வழங்கினார்.

அது போல பேரா. சுந்தரவள்ளி தோழர் ஜீவரசாப்தன் ஆகியோருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மண்டல செயலாளர் நீடூர் நபிஸ், பொருளாளர் சதக்கத்துல்லா, துணை செயலாளர்கள் சுவாமிமலை ஜாஹிர், ஆயங்குடி நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர

தகவல் :
#mkp_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
25.06.2024.