#குவைத்தில்… பஞ்சாப் களத்தில் கொல்லப்பட்ட விவசாயிக்கு இரங்கல்…. MKP தமிழர் எழுச்சி மாநாட்டில் நெகிழ்ச்சி…

பிப்.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான மனிதநேய கலச்சாரப் பேரவையின் சார்பில் குவைத் தமிழர் எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாநாட்டு பேருரையாற்றுகிறார்.

பேராசிரியர் சுந்தரவள்ளி மற்றும் ஊடக தோழர் ஜீவ சகாப்தன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டு நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் MKP மண்டல செயலாளர் நீடூர் நஃபிஸ் அவர்கள், பஞ்சாப் – ஹரியான எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்ட சுப்கரன் சிங் விவசாயிக்கு ஆதரவாக ஒரு நிமிடம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்யுமாறும், அங்கு படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

உடனே மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தமிழர்களும் எழுந்து நின்று தங்கள் இரங்கலை – அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.

இது உணர்வுப்பூர்வமாக இருந்தது.

இந்த மாநாட்டு அரங்கின் நுழைவாயிலுக்கு முதுபெரும் இடதுசாரி தலைவரும், தமிழ்நாடு CPM கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர். திரு. சங்கரய்யா அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#குவைத்_மண்டலம்
23.02.2024.