நெல்லையில் இணைப்பு தொடர்கிறது… மாற்று கட்சியினர் பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்

பிப்ரவரி.19.,

மஜக-வின் அமைதி வழி அணுகுமுறைகளின் மீது ஏற்பட்டு வரும் நம்பிக்கைகளும், கள யதார்த்தங்களுடன் கூடிய நிதானமான அணுகுமுறைகளும் பல்வேறு தரப்பினரை ஈர்த்து வருகிறது.

இதனால் தமிழகமெங்கும் மஜக பலப்பட்டு வருவதும், அதன் காரணமாக புதியவர்களின் இணைவுகள் நடப்பதும் சமீப நாட்களாக தொடர்கிறது.

இன்று நெல்லையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த தீவிர களப்பணியாளர்கள் வீரவநல்லூர் இளநீர் அப்துல் மற்றும் மேலப்பாளையம் 50 வார்டுக்குட்பட்ட ஹாமிம்புரம் உமர் பள்ளிவாசல் செயலாளர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் அதில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ அவர்கள் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பாளை பாரூக், மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி, பொருளாளர், அலி மற்றும் அலிஃப் A. பிலால் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
19.02.2024.