மஜகவில் இணைந்த புதியவர்கள்… சென்னையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்

பிப்ரவரி.19.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக மஜக-வில் இளைஞர்கள், மாணவர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட மக்களும் இனைந்து வருகின்றனர்.

இன்று தென் சென்னை கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் பலர் மஜக மாவட்ட துணைச்செயலாளர் ஆலந்தூர் கபீர் தலைமையில், மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்து கொண்டார்கள்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கையை மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

தலைமையகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் S.M.நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
18.02.2024.