பாளையில் படுகொலை! அப்துல்காதர் குடும்பத்தாருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆறுதல்.!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார்.

இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் அவர் இல்லத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

அச்சமயத்தில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் படுகொலை செய்யபட்ட இளைஞரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் படுகொலை குறித்து விசாரித்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதில் சட்டபடியான அனைத்து நடவடிக்கைகளிலும் மஜகவினர் உங்களுக்கு துணை நிற்போம். எந்தநேரமும் எங்களது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மனித உரிமை பாதுகாப்பு அணி முருகேசன், டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
18-09-2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.