நேரில் ஆறுதல்! முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன்… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…

பிப்ரவரி.16.,

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய கல்வி அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி அவர்கள் விபத்தில் மரணமடைந்ததையொட்டி, அவருக்கு ஆறுதல் கூற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று நேரில் சென்றார்.

பிறருக்கு சேவை செய்யும் நோக்கை தன் மகன் தன்னிடம் விட்டுச் சென்றிருப்பதாக சைதை துரைசாமி அவர்கள் அந்த துயரமான நிலையிலும் கூறினார்

அவரது இரங்கல் நிகழ்வில், தன் அறக்கட்டளையில் படித்த IAS, IPS, IFS, அதிகாரிகள் நாடு முழுவதிலிருந்தும் ஆறுதல் கூற வந்திருந்ததை பார்த்து, ஒரு மகன் போனாலும் இத்தனை மகன்களும், மகள்களும் இங்கு தனக்கு ஆறுதல் கூற வந்திருப்பதாக கூறிய செய்தி தன்னை நெகிழ செய்ததாக, தலைவர் தமிமுன் அன்சாரி அவர்கள் அவரிடம் கூறி, ஆறுதலை பகிர்ந்து கொண்டார்.

இச்சந்திப்பின் போது, மாநில செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராகிம், இளைஞர் அணி மாநில பொருளாளர் கோவை ஃபைசல், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
16.02.2024.