மஜக பொதுக்குழு பணிகள் தலைமையகத்தில் பணிகள் தீவிரம்

பிப்ரவரி.14.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு எதிர்வரும் பிப்ரவரி 28, 2024 அன்று நடைபெற உள்ளது.

அதை முன்னிட்டு அழைப்பிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது.

தலைமையகத்தில் நிர்வாகிகள் அவற்றை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் பொதுக்குழு தொடர்பான இதர பணிகள் குறித்த திட்டமிடல்களும் தலைமையகத்தில் நடந்த வண்ணம் உள்ளது.

தற்போது தலைமையக பணிகள் மாநிலச் செயலாளர் நாகை. செய்யது முபாரக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் அலுவலக செயலாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் சிவகங்கை அபுதாகீர் அவர்களும் செயல்பட்டு வருகிறார்.

வழக்கமான அலுவலக நேரம் காலை 10.30 முதல் மாலை 7.30 வரை என்றாலும், பொதுக்குழு பணிகள் காரணமாக நிர்வாகிகள் வந்த வண்ணமுள்ளதால் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
14.02.2024.