மயிலாடுதுறையில்… மஜக பொதுக்குழு ஏற்பாட்டு பணிகள்! தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு

பிப்ரவரி.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது.

நேற்று கடலூர் தெற்கு மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மாநில செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான நெய்வேலி. இப்ராகிம் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கிளை வாரியான சுற்றுப்பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு, அணிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மட்டும் இனி மேற்கு மாவட்டம் என்றும், பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகள் கிழக்கு மாவட்டமாக செயல்படும் என்றும் அதற்கேற்ப நிர்வாகிகள் நியமனம் அறிவிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் எதிர்வரும் பிப்ரவரி 28- மயிலாடுதுறையில் நடைபெறவிருக்கும் தலைமை பொதுக்குழுவுக்கான அமைப்புக் குழுவும் உருவாக்கப்பட்டது.

துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், மாநிலத் துணைச் செயலாளர்கள் பேரா. அப்துல் சலாம், பண்டாரவடை மஹ்ரூப் ஆகியோர் கொண்ட தலைமை ஆயத்தக் குழுவுடன், இக்குழு இணைந்து செயலாற்றும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிரம்மாண்ட மண்டபம், தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வினியோக குழு, தொண்டரணி ஏற்பாடு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் மெளலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் புதுக்கோட்டை துரை முகம்மது, MJTS மாநில துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் ஆகியோரும் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மேற்கு மாவட்ட அமைப்புக் குழு பொறுப்பாளர் வானதி ராஜபுரம் சலீம் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மயிலாடுதுறை_மேற்கு_மாவட்டம்
11.02.2024.