You are here

திருப்பூரில் எழுச்சி.!! மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்…

பிப்ரவரி:12.,

திருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியான சிறப்புவாய்ந்த ஊத்துக்குளியில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இளைஞர்கள் திரளானோர் இணைப்பு நிகழ்வு மாவட்ட செயலாளர் ராயல்ராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் பாபு அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் நெல்லை ரமேஷ் தேவர், MJTS மாநில துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இளைஞர்கள் திரளானோர் கட்சியில் இணைந்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் மஜக செயல்பாட்டாளர் ஜாகீர் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் கொள்கை குறித்து விரிவாக விவரித்து பேசினார்.

சிறப்பான முறையில் நடந்த இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பர்ஷாத், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அக்கிம், பல்லடம் நகர செயலாளர் அபுதாஹிர், பல்லடம் நகர பொருளாளர் ஷாஜகான் மங்கலம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சமூக போராளி சலீம்மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வானவில் காதர், துணைச் செயலாளர் ஜாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாவட்டம்
11-02-2024.

Top