பிப் 10 திருச்சி மத்திய சிறை முற்றுகை..! இறுதிகட்ட பணிகள் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் OR. ஜாக்கிர் உசேன் தலைமையில் லால்பேட்டையில் நடைபெற்றது.

இதில் பிப் 10 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டத்தின் இறுதி கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், வாகன ஏற்பாடுகள், மக்களை திரட்டுதல் போன்றவைகள் குறித்து இக்கூட்டத்தில்
ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் SA. தையுப் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
04.02.2024.