நாம் தமிழர் வீடுகளில் சோதனை… NIA வின் இலக்குத்தான் என்ன? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம்

நாம் தமிழர் கட்சியினரின் வீடுகளில் NIA சோதனை நடத்தியிருக்கிறது.

அவர்கள் ஜனநாயக ரீதியாக அரசியலில் களமாடுகிறார்கள்

அவர்களது அரசியலின் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அவர்களை தவறானவர்களாக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை மனிதநேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது.

தேசிய புலனாய்வு முகமை (NIA) தமிழ்நாட்டையே சுற்றி சுற்றி வருகிறது.

அவர்களது இலக்குத்தான் என்ன? என்ற கேள்வி மக்களிடம் வலுப்பட்டு வருகிறது என்பதை ஒன்றிய அரசு புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகவாதிகளை ஜனநாயக ரீதியாக களத்தில் எதிர்கொள்வதே அரசியல் ஆளுமையாகும்.

இவண்

மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04.02.2024.