பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்… 600 பேர் பங்கேற்க வடசென்னை கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்… மாநில துணைச் செயலாளர் S.M.நாசர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்…

ஜன.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், வடசென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் L.ஜாபர் சாதிக் தலைமையில் திருவொற்றியூரில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் இறுதிக்கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு வடசென்னை கிழக்கு மாவட்டத்திலிருந்து 600-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கதீர் உசேன், மாவட்ட பொருளாளர் M. நிஜாம் பாய், துணைச் செயலாளர் M.S. காசிம் ஷெரீப், தொழிற்சங்க செயலாளர் S.வெங்கடேசன், பொருளாளர் R.N. ஜீலானி அகமத், துணைச் செயலாளர் இளங்கோவன், மருத்துவ செயலாளர் G. மணிகண்டன், பொருளாளர் N. அசார் உசேன், தொழில் நுட்ப செயலாளர் M. J. முகமது ரியாஸ், இளைஞர் அணி செயலாளர் N. அமீர் உசேன், துணைச் செயலாளர் M. J. முகமது பைசல், தொகுதி நிர்வாகி முகம்மது ரஃபி உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
26.01.2024