பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்..

500 பேர் பங்கேற்க ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

ஜன.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான கோட்டை ஹாரிஸ் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் பைசல் ஆகியோர் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 500-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக ஓய்வு பெற்ற முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் தெற்கு தரவை அபுல் கலாம், ராமநாதபுரம் pvm அபுல் ஹசன், இதம்பாடல் சாகுல் ஹமீது ஆகியோர் தங்களை மஜக-வில் இணைந்து கொண்டனர்

இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் மீசல் கனி, கிழக்கு மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் நஸிர், மாவட்ட துணைச் செயலாளர் காஜமைதின், ராமநாதபுரம் நகர செயலாளர் செய்யது அலி உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம்
22.01.2024