பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்….

,700 பேர் பங்கேற்க நெல்லை மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

மாநில பொருளாளர் ஜே.எஸ் ரிஃபாயீ பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்…

ஜன.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், நெல்லை மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் JS.ரிஃபாயீ அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும் மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம் அவர்கள் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய போராட்டத்தின் இறுதிக்கட்ட பரப்புரை பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து 700-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

முன்னதாக மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் அப்பாஸ், ஆஷிக் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
26.01.2024.