நாகூரில்… மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…

ஜனவரி.27.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் நாகூர் நகரத்தில் முன்னால் ஜமாத் நிர்வாகி M. சுல்தான் மரைக்காயர் அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் முகமது இப்ராஹிம், நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் யாசர், முகமது பைசல், ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2024.