சேலத்தில்… 75வது குடியரசு தின விழா.! மஜக மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா தேசியக்கொடி ஏற்றினார்…

ஜனவரி.27.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் மாநில செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட துணை செயலாளர் சேட்டு, இளைஞர் அணி செயலாளர் ஜபிர், Mjts முஸ்தபா. மாபலி, அம்மா பேட்டை பகுதி செயலாளர் சதாம் உசேன், நிசார், பாபு பாய் முபாரக், அனீஸ் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#சேலம்_மாவட்டம்
26.01.2024.