ஏனங்குடியில்.. மஜக சார்பில் 75வது குடியரசு தின விழா…

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் ஏனங்குடியில் ஆதலையூர் ஜமாத் முத்தவல்லி ரசீது அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்தார். பிறகு தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று மஜக வினர் இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத்,நாகை மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன், மாவட்ட துணை செயலாளர் பேபி ஷாப் (எ) பகுருதீன்,MJVS மாவட்ட செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக், திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், ஏனங்குடி கிளை செயலாளர் யாசீன் மற்றும் ஆதலையூர் கிளை உறுப்பினர்கள்,ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26/01/2024.