பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

1000 பேர் பங்கேற்க கடலூர் வடக்கு மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…

மாநில செயலாளர் இப்ராஹிம் பங்கேற்று ஆலோசனைகள _வழங்கினார்…

ஜன.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், கடலூர் வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நெய்வேலி. இப்ராஹிம் அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்டத்தில் இருந்து 1000-க்கும் அதிகமான மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜிஸ்கான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மன்சூர், மற்றும் ஆதம் சேட், அசாருதீன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…

தகவல்:
மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
MJKitWING
கடலூர்_வடக்கு_மாவட்டம்
22.01.2024