பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

100 வேன்களில் பங்கேற்க திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாககுழு கூட்டத்தில் தீர்மானம்.…

ஜனவரி.22.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர்
கட்டிமேடு B.ரஹ்மத்துல்லா.BE வரவேற்புரை நிகழ்த்தினர்

இதில் சிறப்பு அழைப்பாளரராக மாநில துணை செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான பேரா. அப்துல் சலாம் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் நீண்ட நாள் ஆயுள் சிறைவாசிகளுக்கு நிரந்தர விடுதலை கோரி தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் பிப்ரவரி-10, 2024 அன்று மனிதநேய ஜனநியக கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை திரட்டி அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதீன், மாவட்ட IT செயலாளர் கட்டிமேடு ஆசிப், மாவட்ட துணை செயலாளர்கள் ஏராஞ்சேரி நஜீம், நாச்சிக்குளம் ஜான் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சித்திக், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
21.01.2024