பிப்ரவரி 10 திருச்சி சிறை முற்றுகை போராட்டம்…

50 வேன்களில் பங்கேற்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டத்தில் முடிவு…

ஜன.22.,

மனிதநேய ஜனநாயக கட்சியின், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாநில துணை செயலாலாளரும், மாவட்ட மேலிட பொருப்பாளருமான ஏ.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மனித உரிமைகள் அணி மாநில செயலாளர் முனைவர். இ.முபாரக் அலி அவர்கள் பங்கேற்று பிப்ரவரி-10, 2024 அன்று திருச்சியில் நடைபெற உள்ள மத்திய சிறை முற்றுகை போராட்டம் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை அழைத்து செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் மாநில விவசாயிகள் அணி துணை செயலாளர் அரசர்குலம் ஷேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட பொருளாளர் அரசை அபுதாஹிர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
21.01.2024